Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Thursday, March 8, 2012

புலி தேசியத்தால் அவ்வளவு எளிதில் வீழ்ந்து போகுமா எமது மீட்பர் பாபாசாஹெபின் விடுதலை தத்துவம்?

-சாக்ய மோஹன்-

இன்னமும் கூட எம்மை "தாழ்த்தப்பட்டவன்" என்றும் "வீழ்த்தப்பட்டவன்" என்றுமே அடையாளப் படுத்தும் சூத்திர பயல்களை எதை கொண்டு சாற்ற? தமிழ் செல்வன் தாழ்த்தப்பட்டவனாம்! மனிதனைக் கொன்று குவித்த பிரபாகரன் மட்டும் உயர்த்தப்பட்டவனா? இப்படி எம்மை தாழ்த்திப் பேசும் மரபுதான் தமிழியம்.

இலங்கையில் தமிழ் பேசும் பகுதிகளில் எந்த ஊரில் "தமிழன்" என்று ஜாதி வித்தியாசம் இல்லாமல் இருந்தார்கள்? இந்த கதை எல்லாம் இனி வேகாது சூத்திர ஜாதி வெறியர்களே! உங்களுக்கு ஆயுதம் ஏந்தி போராட இனி சூத்திரர்களையே கூப்பிடுங்கள்! ஹீனம் மானம் இல்லாமல் ஏனடா எம் மக்கள் காலில் வந்து விழுந்து வீழ்ந்து மடிந்த புலிகளுக்கு வீர வணக்கம் சொல்ல எம்மை கெஞ்சுகிறீர்கள்! தமிழ் வழி அரசியல் செய்யும் திருமாவளவனை வேண்டுமானால் மயக்கி புலி வாலை பிடிக்க வைக்கலாம்; எந்தை பாபாசாஹெப் வழியில் ஜாதி-எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு உண்மையான அம்பேத்கரியவாதியை புலிகளின் ஆயுதவழி இழுக்க முடியாது.

ஒரு பக்கம், அரசியல் கட்டமைப்பு எனும் மாய வலையில் சிக்கி சேரியிலிருந்து கிளம்பிய ஓரிரு கட்சிகள் வேண்டுமானால் 'புலி', 'தமிளு' தேசியம், "முல்லையாறு' என்று எல்லைகளை வகுத்துக்கொண்டு தலித் குடிகளுக்கான விடுதலை அரசியலை விட்டு விலகி துரோகம் செய்யலாம். எல்லா தலித் குடிகளும் தமிழ் தேசியம் பேசவில்லை சூத்திர-ஆதரவாளர்களே! தமிழ்-பேசும் தலித் குடிகளில் அதிகபட்சம் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இந்த "தமிழீழ" மொழி-இன புலி மாயைக்குள் சிக்கி இருக்கலாம். மற்ற 98 % தலித் குடிகள் எமது மீட்பர் பாபாசாஹெப் வழியில் தான் இருக்கிறோம் என்ற செய்தியை தெரிந்து கொள்ளுங்கள்!

அண்ணலின் தத்துவத்தை தாண்டி கடந்து திருமாவளவனும் செல்ல முடியாது; எந்த கொம்பனும் அண்ணலுக்கு நிகர் என சொல்ல திராணி ஏது? சமூக-அரசியல் நேர்மையற்ற தலித் தலைவர்கள் தம் மக்களையே சொற்ப பலனுக்காக விற்றுத் தின்பார்கள்! இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு அண்ணல் போதிசத்துவர் பாபாசாஹெப் மட்டுமே எமது மீட்பர்! எந்த ஆயுத-இன வெறியில் மாண்டுபோன "மாவீரர்"களும் மற்றும் சூத்திர தரகு பேசும் நாஸ்திகர்களும் எமது மீட்பரை வைத்து ஒப்பிட தகுதி இல்லை. புத்தரின் நேர்மை-சத்தியம்-ஒழுக்கம்-அறிவு பாதையை அடியொற்றிய தன்மானம் உள்ள எந்த அம்பேத்கரியனும் மேற்குறிப்பிட்ட பாதைக்கு எதிராக ஆயுத கொடூர அபுத்தியில் நம்பிக்கை கொண்ட ஹிந்து பாசிச புலிகளைப் போற்றமாட்டான்!

No comments:

Post a Comment