Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Wednesday, March 7, 2012

அயோத்திதாசர் மீது அவதூறு: தமிழியம் வழியும் சூத்திரர் சூழ்ச்சி

-சாக்ய மோஹன்-

ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி பிறகு மனுஷனாக வாழச் சொன்ன எமது பேரறிஞர் பண்டிதமணி அயோத்திதாசரையும் கடிச்சி கொதற பார்க்கும் குரங்குத்தனத்தை என்னச் சொல்ல? சில ஆண்டுகளுக்கு முன்னால் ராமசாமி கொண்டல் என்று பீத்திக்கொள்ளும் புனிதப் பாண்டியன் தனது தலித் முரசு எனும் ராமசாமி முரசு மூலம் பண்டிதர் சக்கிலியரை தாழ்ந்தவராகவும் பறையர்களை தாழ்த்தப்பட்டவராகவும் குறிப்பிடுகிறார் என ஒரு குட்டையை கலக்கினார். காரணம் அயோத்திதாசர் எழுத்து வெளியானவுடன் ராமசாமியின் உண்மை முகம் வெளுத்துப் போயிற்று. ராமசாமி புகழ் மங்கும் என்று பயந்த நாஸ்திகவாதிகள், வழக்கம்போல பறையரை குறிவைத்து தலித் சமூகத்தில் குட்டைகலக்கும் வேலையில் ஈடுபட்டுவிட்டனர்.

இந்த விஷயத்தில் நாம் இந்த நாஸ்திகருக்கு முன் வைக்கும் கேள்வி என்னவென்றால், அயோத்திதாசரின் தமிழன் பத்திரிக்கையை மீண்டும் பதிப்பு செய்த அலோசியஸ் பல இடைச் சொருகல்களை செய்தும் முக்கிய செய்திகளை வெளியிடுவதில் இருட்டடிப்பும் செய்திருக்கிறார் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டு இருக்கிறோம். முதலில் தமிழனின் ஒரிஜினல் காப்பியை ஸ்கேன் செய்து முதன்மை ஆதாரமாக வெளியிடச் சொல்லுங்கள்! இரண்டாவது, அயோத்திதாசர் குறிப்பிடும் தாழ்ந்த வகுப்பார் என்பதை அவரின் ஜாதி-ஹிந்துக்கள் மீதான விமிரிசன்மாகவே எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, புளுகு புனுகு புனித பாண்டியன் சொல்வதை போல எடுத்துக்கொள்வது அபாயகரமானதேயாம்.

அடிப்படை கல்வி கற்று பள்ளி இறுதி வகுப்பு வரையும் அதற்கு மேலும் படித்திருக்கும் நம் மக்களுக்கு வெறும் துப்புரவு வேலைதான் கொடுப்பதா என கேள்வி கேட்கும் பண்டிதர், அடிப்படை கல்வி இல்லாத ஜாதி ஹிந்துக்களுக்கு இந்த துப்புரவு வேலையை செய்யவைக்காதது ஏன்? என கேள்வி கேட்கிறார். ஆனால், பதிப்பாசிரியர் அலோசியஸ் ஒரு சூத்திரர்-ராமசாமி பிரியர் என்பதால் பல இடைச் சொருகல்களை செய்திருக்கிறார் என்பதை அறிந்து இனியாவது, ஒட்டுமொத்த தலித் சமூகத்தை உடைத்து நொறுக்கும் மொழி-இன தேசிய சூத்திர மற்றும் சூத்திர ஆதரவு தீய சக்திகளை விட்டு விலகி இருங்கள்!

No comments:

Post a Comment