Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Tuesday, April 10, 2012

மீண்டும் வா எம்மை மீட்டுருவாக்கம் செய்ய!

மீண்டும் வா எம்மை மீட்டுருவாக்கம் செய்ய!
(For Dr. Poovai Murthiyar)

-சாக்ய மோஹன்-

போதியின் கிளை பரப்பிய
சாக்கியத்தின் வேர்கால் விருட்சம்!

போதிசத்துவர் அம்பேத்கரின்
விடுதலைக் கனல் நெருப்பு !

ஆதிக்க ஜாதியரின்
வாலறுத்த வாள்வீச்சு !

அம்பேத்கர் என்னும் கருணாமூர்த்தியின்
கனல் மூர்த்தி நீ!

வட மாவட்டங்களில் சூத்திர மிருக பயம் போக்கிய
தலித் குடிகளின் காவல் தெய்வம் நீ!

தமிழரின் சூத்திர திமிர் அடக்கிய
தலைமகனே!
தமிழர் முடக்கிய
தீண்டா சேரிகளின் வரைபடத்தை
சுருட்டி வைத்து
சூத்திரரின் தீண்டாமை எல்லைகளை கடக்க
உனது சுட்டு விரலே துப்பாக்கியாய்
உன்னோடு நாம் நடந்த காலம் பொற்காலம் தான்!

தலித் குடியிருப்புகள் இனி
தமிழரின் சேரிகள் இல்லை என 
அம்பேத்கர் நகர்களாக பெயர் மாற்றம் செய்தாய்!
ஆனால், இன்று அம்பேத்கர் நகரங்கள்
மீண்டும் தமிழர்களின் தீண்டா சேரிகளாக
கோரைப்பல் கொலைப்பாதக
புலிகளின் கூடாரமாக மாறுவதோ?

மீண்டும் வா அதே நெருப்புச் சிந்தனையாய்!
எம்மை மீட்டு விடுவி
இந்த சொத்தை மொழிதேசிய
கூகைக் குகையிலிருந்து!

No comments:

Post a Comment